கடந்த 2019இல் நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றியது. முதல்வராக ஜெகன்மோகன் உள்ள நிலையில், வரவிருக்கும் 2024 மக்க ளவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற் கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள் ளது.
இந்நிலையில், தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஏற்கெனவே பதவியில் இருந்த எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியதால் படு தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந் தது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஏற்கெனவே பதவியில் இருக்கும் எம்எல்ஏகளுக்கு மீண்டும் சீட் வழங்கினால் சந்திரசேகர ராவ் நிலைமை நமக்கும் ஏற்படும் எனக் கருதி, தற்பொழுது எம்எல்ஏ-வாக உள்ள 40 பேருக்கு வரவிருக்கும் சட்டமன்ற தேர்த லில் வாய்ப்பு கிடையாது என, பெயர் பட்டியலுடன் முதல்வர் ஜெகன்மோகன் புதிய திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த ரகசிய திட்டம் தற் பொழுதே கசிந்ததால் எம்எல்ஏக்கள் ராஜி னாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தக வல் வெளியாகியது.
இந்நிலையில் ஜெகன்மோகனின் ரகசிய திட்டத்தின் முதல் விக்கெட்டாக மங்களகிரி எம்எல்ஏ அல்லா ராம கிருஷ்ண ரெட்டி தனது பதவியை ராஜி னாமா செய்துள்ளார். இவர் காங்கிரஸ் அல்லது தெலுங்கு தேசத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லா ராமகிருஷ்ணாவைப் போல மேலும் 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தற்பொழுதே காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சியில் இணைந்து அந்த கட்சியில் இருந்து எம்எல்ஏ சீட் பெற முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக் களின் ராஜினாமா அறிவிப்பு ஆந்திர அர சியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.